புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும்

கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான திறனாய்வு நிலைப்பட்ட நூல்களின் தேவை காலத்தின் பணிப்பாக எழுச்சி கொண்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் பயனுள்ள முயற்சிகள் பல நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
கோட்பாட்டு நிலையிலும் நடைமுறை நிலையிலும் எதிர்-கொள்ளப்படும் பிரச்சினைகளும், மாற்றுவகை நோக்கும் நூலின் உட்பொதிவில் அடங்கியுள்ளன. பெரும்பாலான முகாமைத்துவ நூல்கள் பல அடுக்குகள் கொண்ட கூம்பு வடிவிலான பாரம்பரியமான முகாமைத்துவ இயல்புகளைச் சிலாகித்துப் பேசியும், வினைத்திறன்களை சமூக மாற்றங்களோடு இணைத்து நோக்காது உள்ளதை மீள வலியுறுத்தும் வகையிலும் சித்திரிப்புக்களை மேற்கொள்ளும் நிலையில் மாற்றுவகைச் சிந்த-னைகளை வலியுறுத்தும் புலமை இயக்கங்கள் எழுச்சி கொண்டன.
கூம்புநிலை முகாமைத்துவத்தை மறுதலித்து தட்டை நிலை ஒழுங்கமைப்பை (குடயவ ழுசபயnளையவழைn) மார்க்சியம் வலியுறுத்தியது. மத்திய ஆதிக்க வலியுறுத்தலில் இருந்து ஓரங்களுக்குச் செல்லலைப் பின்னவீனத்துவம் வலியுறுத்தியது. இவை பற்றிய கருத்தாடலை உள்ளடக்கிய நூலாக்கத்தின் தேவையை வலியுறுத்தும் நண்பர்கள் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், மதுசூதனன் மற்றும் சேமமடு பதிப்பகத்தினர் நன்றிக்குரியவர்கள்
சபா.ஜெயராசா


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.